மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகள்
————
கழிவுகள் வெளியேற்ற கனரக வாகனங்கள்
பிழிவுகள எங்கே செல்லும் பிரதான கேள்வி
குழிவுகள் குண்டுகள் கொப்பளிக்கும் நீர்நிலைகள்
தவறிவிழுந்தால் தலை சகதிக்குள் தான்
சூழலில் மாசு படிந்ததால்
ஓசோனில் ஓட்டை
சூழலும் புகையால்
முட்டி வழியுது
கண்ணி உலகின் முன்னேற்றம்
கண்மூடித் தனமான பின்்விளைவு
விஞ்ஞானம் முன்னேற
அஞ்ஞானம் அருகிவர
ஆங்காங்கே மக்களின்
அவலங்கள் கதியற்று
போர் என்னும் ரீதியில்
பூலோகம் புகைமண்டலம்
கார்மேக்க் கருக்கலினால்
பெய்துவரும் மழை
கடலதனையே தானுயரும்
கடலெல்லாம் நீர் நிரம்ப
கழிவுப் பொருளும்
அதற்குள் அடக்கும்
பொலித்தீனும் கரையாமல்
மீனின் வயிற்றில் இருக்கும்
இதைக் கண்டும் மனிதன்
கழிவுகளை தண்ணீரில்
தள்ளுகிறான்
கழிவுப் பொருட்களை கப்பலேற்றி
வறிய நாட்டிற்கு அனுப்பி விட்டு
அவர் இங்கே ஆனந்தமான வழ்வு
வாழுகிறார்
கடலுக்குள் கழிவுகள்
கரைவது எப்படி
காலவோட்டத்தில் கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகள்
மனிதன் உயிர் வாழமுடியுமா
என்ற கேள்விக் கணையுடன்

Nada Mohan
Author: Nada Mohan