இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

நகுலா சிவநாதன்

நூல்கள்

வண்ண நூல்கள் கற்றிட்டே
வாழ்வில் என்று உயர்வோமே
எண்ணம் யாவும் எழிலறிவு
ஏற்றம் பெற்றே மிளிர்வோமே
கண்ணில் காணும் நன்நால்கள்
கவிதைக் கலையை வளர்த்திடுமே
திண்ண மாக உலகினிலே
திடமாய் வென்று புகழாவோம்

நூல்கள் என்னும் ஆயுதமே
நுணுகிக் கற்கும் வேலாகும்
தாள்கள் கொடுக்கும் வண்ணச்சுகம்
தளிர்க்கும் செம்மை மொழியறிவு
வேல்கள் போலே கூர்மையாலே
வென்று வாழ்வில் நிலைத்திடவே
கால்கள் போலே நடைபயின்று
கணணித் தமிழாய்ப் படித்திடுக!

நகுலா சிவநாதன்1716

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading