” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

கட்டாந்தரையை விளைநிலமாக்கி
எட்டாதினியிங்கு பசியெமக்கென
தொட்டதெல்லாம் பொன்னாக்கி
ஈட்டியதவர் ஆற்றல்களென்பேன்

வறுமையில் உழன்றவர்
வாட்டத்தில் வாழ்ந்தாலும்
கல்வியில் சிறந்தவர்களாய்
களவெற்றிகண்டோர் ஆற்றல்களே !

முதலாம்உலகு தாமெனவே
முழங்கிடுவோர் மத்தியில்
மூன்றாம்உலகாய் இருந்து
முதன்மையடைந்தது ஆற்றலே !

எத்தனைமுறை வீழ்ந்தோம்
என்பதல்ல முக்கியமிங்கு
அத்தனைமுறையும் எழுந்தோம்
என்பதவர் ஆற்றல்களே !

ஆற்றலெனும் சக்திகொண்டு
ஆக்கிடும் நம்பிக்கையோடுப்
வாழ்ந்திடுவீர் அன்புச்சோதரரே
வெற்றியன்றி வேறில்லையுமக்கு

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan