அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

நகுலா சிவநாதன்

வளர்ந்த குழந்தைகள் தாமே

வளர்ந்த குழந்தைகள் அவர்கள்
வாடா மலர்கள் போன்றோர்
சிந்தை சிறப்பாய் வளர்ந்தாலும்
சீரிய எண்ணம் மிகுந்தவர்கள்

வீரியமாய் விளங்கும் குழந்தைகளாய்
நேரிய பார்வையும் நெடிய வனப்பும்
கூரிய எண்ணம் குவித்து நிற்பவர்கள்
வளர்ந்த குழந்தைகள் தாமே!

வண்ணத்துப் பூச்சிகளாய் வளர்ந்து நின்றாலும்
குழந்தையுள்ளம் குதூகலித்து நிற்கும்
பிறப்பின் பெருமை சிறப்பின் துலங்கலாய்
புலத்தில் உதித்தாலும் புகழாய் மிளிரட்டும்

நகுலா சிவநாதன் 1719

Nada Mohan
Author: Nada Mohan