கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

இரா.விஜயகௌரி

கனவுச்சாலை…………

விடியும். பொழுதுகளை
கனவுச் சுமை தாங்கி நிதம்
நினைவுப் பொதி சுமந்த
கழுதைகளாய். நகர்கின்றோம்

அழுத்தும் பெரும் சுமைகள்
அயர்ச்சிப் பணிச்சிலந்தி
அமுக்கும் பெரும் கடன்கள்
அனைத்தும் நம் தோளில்

விலக்க. நினைத்தாலும். இவை
விலகா. தோழர்களாய்
நாளைப் பொழுதுக்காய்
இன்றைத்தொலைத்தோடுகின்றோம்

வாழ்ந்த. பொழுதேது. நாம்
மகிழ்ந்தெழுதும். கணமேது
அலைந்து. களைத்து. மனம்
அயர்வின் தொடுபுள்ளி. தானேது

எமக்கேன் அமைதியில்லை
கனவுச்சாலைகளில். நாம் நிதமும்
புரவிச். சவாரிகளில். -எம்
புதையலைத். தொலைக்கின்றோம்

நிறைவைக். கொண்டெழுவோம்
விரவிக். கரம் இழைவோம்
உறவுப். பின்னலிலே. எம்
உயர்வின். வெற்றி கொள்வோம்

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading