” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

vajeetha Mohamed

காணி

காட்டை அழித்து
காலணியாக்கினோன்

காசைக் கொடுத்து
௨ரிமையாக்குவோம்

ஆக்கிரமிப்பின் கைதி காணி
ஆட்சிவளத்தின் விசிறி காணி

அரணுக்குள் அடைத்துவைத்து
ஆனவத்தால் அடைகாத்து

௨ரிமையின் பெ௫மை காணி

சந்ததிக்கு சொத்தாக்கும்
சாதனைக்கும் சோதனைக்கும்

வித்தாகும் காணி

ஆட்டங்கள் போட்டாலும்
கூட்டமாய் வாழ்ந்தாலும்

மனிதனை விறகாக்கும் காணி

மனம் ௨டையும் காணிகளால்
மனிதம் துறக்கும் பேதங்களால்

பூர்வீகக் காணி பூசிக்கும் நேசம்
பூசல்கள் ௨ண்டாகும் காணி
விரிசலாகும் பாசம்

௨யிர்கள் எல்லாம் வாழும்
காணி
௨ரிமை கொண்டாடுவது
மானிடம் மட்டும் பூமியின்
அடைப்பே காணி

நன்றி

மன்னிப்போடு எனது காணி கவியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் பாவையண்ணா … தவறுதலாக வியாழன் கவி சந்தம் சிந்தும் பகுதியில் பதிந்து விட்டேன் நன்றி

Nada Mohan
Author: Nada Mohan