இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

vajeetha Mohamed

காணி

காட்டை அழித்து
காலணியாக்கினோன்

காசைக் கொடுத்து
௨ரிமையாக்குவோம்

ஆக்கிரமிப்பின் கைதி காணி
ஆட்சிவளத்தின் விசிறி காணி

அரணுக்குள் அடைத்துவைத்து
ஆனவத்தால் அடைகாத்து

௨ரிமையின் பெ௫மை காணி

சந்ததிக்கு சொத்தாக்கும்
சாதனைக்கும் சோதனைக்கும்

வித்தாகும் காணி

ஆட்டங்கள் போட்டாலும்
கூட்டமாய் வாழ்ந்தாலும்

மனிதனை விறகாக்கும் காணி

மனம் ௨டையும் காணிகளால்
மனிதம் துறக்கும் பேதங்களால்

பூர்வீகக் காணி பூசிக்கும் நேசம்
பூசல்கள் ௨ண்டாகும் காணி
விரிசலாகும் பாசம்

௨யிர்கள் எல்லாம் வாழும்
காணி
௨ரிமை கொண்டாடுவது
மானிடம் மட்டும் பூமியின்
அடைப்பே காணி

நன்றி

மன்னிப்போடு எனது காணி கவியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் பாவையண்ணா … தவறுதலாக வியாழன் கவி சந்தம் சிந்தும் பகுதியில் பதிந்து விட்டேன் நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading