இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சக்தி சக்திதாசன்

காணிநிலம் தேடித்தேடி
நாணிடும் வகையிலெம்
பேணிடும் அமைதியை
வீணடிக்கும் மாந்தர்

உதிக்கின்ற வேளையும்
உதிர்கின்ற வேளையும்
உணரமுடியா திருந்தும்
உண்மையை மறந்தனர்

இருக்கின்ற செல்வம்
இரந்துண்டு வாழ்வதை
இதயத்தில் கொண்டிவர்
இயங்கிட மறந்திட்டாரே !

போதுமெனும் மனது
போதாது என்றேயிவர்
பொதுவுடை காணிநிலமும்
பெற்றிட ஆவலிலுளைவர்

நீர்க்குமிழியெம் வாழ்க்கை
நிம்மதி ஒன்றையேதேடி
நீக்குவோம் பேராசையை
நாடுவோம் நல்வழிகளை

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading