20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
காணிநிலம் தேடித்தேடி
நாணிடும் வகையிலெம்
பேணிடும் அமைதியை
வீணடிக்கும் மாந்தர்
உதிக்கின்ற வேளையும்
உதிர்கின்ற வேளையும்
உணரமுடியா திருந்தும்
உண்மையை மறந்தனர்
இருக்கின்ற செல்வம்
இரந்துண்டு வாழ்வதை
இதயத்தில் கொண்டிவர்
இயங்கிட மறந்திட்டாரே !
போதுமெனும் மனது
போதாது என்றேயிவர்
பொதுவுடை காணிநிலமும்
பெற்றிட ஆவலிலுளைவர்
நீர்க்குமிழியெம் வாழ்க்கை
நிம்மதி ஒன்றையேதேடி
நீக்குவோம் பேராசையை
நாடுவோம் நல்வழிகளை
சக்தி சக்திதாசன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.