இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை
காணி
———
காணி நிலம் வேண்டும்
அங்கு ஒரு பெரிய வீடும். வேண்டும்
என்னே பெரிய ஆசை
பாரதியின் கனவு ஆசை
பாமர மக்களுக்கும உண்டே
காணி சொத்து பரம்பரையாய்
வந்து சேரும்
சொத்து இல்லாதோர்
ஏங்குவர். ஒரு காணித் துண்டு
வாங்குவதற்கு
எங்கள் தந்தையும் ஒரு காணி வாங்கினார்
அங்கு ஒரு வீடு கட்டினார்
சொந்த உழைப்பில் கட்டினார்
ஆறுபிள்ளைகள் அழகிய குடும்பம்
அந்த வீட்டில் நிம்மதியாக
வாழ்ந்தார்
இன்று அவர் இல்லை
அவர் காணியில் அவர் சந்ததி
வாழும் நிலையில
காணி யை விற்காது
வைத்திருப்பார்களா
என்ற கேள்வியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading