இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கமலா ஜெயபாலன்

காணி
அன்னை ஞாபகம் அந்தக் காணி
அதனை மறக்க யாரால் முடியும்
தன்னை கொடுத்து தாங்கிக் காத்து
தனமும் தந்த தங்கப் பூமி

புல்லும் வளர்ந்து பொது இடமாகி
போவோர் வருவோர் போக்கிட மாகி
அல்லும் பகலும் ஆக்கியது எல்லாம்
அபகரித்தும் அதைக் காக்க

பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு
பற்றை வளர்ந்து பாம்புப் புற்றாய்
வார் ஓடி வரம்பும் போய்
வளர்ந்த தென்னை வருமானம் வளமாய்

உடையவன் இன்றேல் ஒருமுழம் கட்டை
உண்மைப் பழமொழி இதவும் அன்றோ
அடுத்தவர் கையில் கொடுப்பது யாவும்
அபகரிப் ஆக துயரமே தேறும்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading