” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 11-05-2023
ஆக்கம் – 44
வெறுமை போக்கும் பசுமை

சுயநலமிக்க மனிதனின் பேராசையால்
பொலிவிழந்து போனது பூமி
வளங்கள் சுரண்டப்பட்டு
உயிர்கள் வாழ முடியாத நிலையில் உலகம்

நிலம் நஞ்சானதால் உணவும் நஞ்சானது
மருந்திற்கு நோயை உருவாக்கும் காலமானது
நீர் வளச்சுரண்டலும் பெரிகிப்போனது
நீரின்றி உலகம் தவிக்கின்ற காலம் வரப்போகின்றது

காடுட்டு வளங்கள் யாவும் அழிக்கப்படுகின்றது
உயிர் காற்றின்றி உயிரினங்கள் தவிக்கின்றது
விண்வெளியிலும் விஞ்ஞானக் கழிவுகள் சுற்றுகின்றது
அழிவின் பாதைக்குள் அண்டமே அகப்பட்டு நிற்கின்றது

எதுவரை செல்லும் இந்த அழிவின் பாதை
இயற்கையிடமிருந்து மிகப்பெரிய
பாடத்தைக் கற்றுக்கொள்ளும் வரை
வெறுமை போக்கும் பசுமை எப்போ வரும்
இயற்கையோடு ஓன்றி வாழும்போது வரும்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
9-05-2023

Nada Mohan
Author: Nada Mohan