20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
வசந்தா ஜெகதீசன்
வெறுமை போக்கும் பசுமை…
தரணி விரிப்பாய் பசுமை
தாங்கும் உயிர்களின் உடமை
உலகைக் காக்கும் உயிர்ப்பு
அழகுக் கோல வனப்பு
அழித்தல் நிறைந்தால் அவலம்
இயற்கை வளமே குன்றும்
இல்லாதொழியும் பசுமை
வெறுமை படரும் நிலமை
மனிதம் செய்த மடமை
மாசுபடுமே சூழல்
மரங்கள் அழிப்பு கொடுமை
மண்ணின் அரிப்பு தொடரும்
கடலே நிலத்தை நிறைக்கும்
மழையின் வளமும் குன்றும்
பசுமை மெல்லக் கரைந்து
பயிர்கள் வளமும் அழிந்து
வெறுமை உலகை வெல்லும்
வெந்தணலில் அகமே வேகும்.
பசுமை விரும்பும் உயர்வே
பாரைக் காக்கும் திண்ணம்
மரங்கள் நாட்டி வளர்ப்போம்
மாற்றும் உலகே ஜெயிக்கும்!
நன்றி
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...