கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வெறுமை போக்கும் பசுமை…
தரணி விரிப்பாய் பசுமை
தாங்கும் உயிர்களின் உடமை
உலகைக் காக்கும் உயிர்ப்பு
அழகுக் கோல வனப்பு

அழித்தல் நிறைந்தால் அவலம்
இயற்கை வளமே குன்றும்
இல்லாதொழியும் பசுமை
வெறுமை படரும் நிலமை

மனிதம் செய்த மடமை
மாசுபடுமே சூழல்
மரங்கள் அழிப்பு கொடுமை
மண்ணின் அரிப்பு தொடரும்
கடலே நிலத்தை நிறைக்கும்
மழையின் வளமும் குன்றும்
பசுமை மெல்லக் கரைந்து
பயிர்கள் வளமும் அழிந்து
வெறுமை உலகை வெல்லும்
வெந்தணலில் அகமே வேகும்.

பசுமை விரும்பும் உயர்வே
பாரைக் காக்கும் திண்ணம்
மரங்கள் நாட்டி வளர்ப்போம்
மாற்றும் உலகே ஜெயிக்கும்!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading