உயிரான உறவு..

வியாழன் கவி 2288 உயிரான உறவு.. உதிரத்தில் உணவூட்டி உணர்வுக்குள் அன்பேந்தி உலகுக்கு வழிகாட்டியவள் உயிரான உறவானாள்.. கருவினுக்கு காரணியாய் காலமெலாம் தாங்கி...

Continue reading

உயிரான உறவே…

வசந்தா ஜெகதீசன் உயிரான உறவே... வெற்றி மிகு வாழ்வில் வீறு கொள்ளும் சிந்தை பற்றியே படர்கின்ற பாதையின் செதுக்கல் பாசமுடன் காட்டி நேசமுடன்...

Continue reading

உயிரான உறவு…..

இரா.விஜயகௌரி வைகறைகள் உயிர்ப்பெழுதும் வனப்பு மிக்க விடியலுக்கு தினமெழுதும் மொழிப்புனலாய் கனவெழுதும் தேவதை இவள் தன்வலியை தான் மறப்பாள் உதிரத்துள்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

பெற்றோர்! சந்தம் சிந்தும் சந்திப்பு!
கருவாக்கி உருவாக்கி
உயர்வாக்கி வைக்க
வரமாகப் பெற்ற
வாஞ்சையாம் உறவு!
மருவாகப் பிறந்தாலும்
மகவாகக் காத்தே
திருவாகப் போற்றிடும்
தெய்வங்கள் பெற்றோர்!

அல்லவை நீக்கி
வல்லவர் ஆக
அல்லும் பகலுமாய்
அனுதினம் கரைப்பது
அவர்தம் உதிரம்!
சொல்லுக்குள் அடங்காச்
சுந்தரம் இவராய்
சொரிந்துமே நிற்பது
நிரந்தர நேசம்!

முகமது சான்றாய்
முகவரி ஆவார்
முழுமதி ஆக்கிட
முழுவாயுள் தருவார்
தகைமகள் கண்டே
தாங்குவார் மகுடம்
தரணியின் இவரின்றித்
தொடருமோ ஆயுள்?

வறுமையை ஒறுத்து
வளங்களைத் தந்தோர்
பெறுமதி புரிந்தே
போற்றிடல் கடனாம்
நறுமுகை என்றே
நாட்டிடல் பேறாம்
இறுதியில் அதுவே
இசைவுறும் நமதாய்!

கீத்தா பரமானந்தன்15-05-2023

Nada Mohan
Author: Nada Mohan