தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கமலா ஜெயபாலன்

பெற்றோரே

தன்னலமற்ற அன்பைத் தந்தாய் தாயே
தன்னை உருக்கி தாங்கினார் தந்தையும்
என்னை மண்ணிற்கு ஈன்றனர் இருவரும்
நன்மை தீமை நமக்கு புகட்டினர்

அல்லும் பகலும் அயரா துழைத்து
செல்வம் தேடி தேவை போக்கி
மல்லுக் கட்டி மதிப்புடன் பிள்ளைகள்
நல்லவராய் வளர நவின்றனர் உதிரம்

மூத்த பிள்ளை முயன்று படிக்க
பார்த்துக் கொழும்புக்கு பக்குவமாய் அனுப்பி
பட்டதாரி ஆக்கி பெற்ற பெருமை
எப்படிச் சொல்வேன் பெற்றோர் பெருமை

அன்னையும் பிதாவும் அன்பின் வடிவம்
அதுவே எமது அன்னை வடிவம்
கண்ணில் கண்ட கடவுளர் தெய்வம்
கருனையே அவர்கள் கண்டிடும் வடிவம்/‘

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading