மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

அபிராமி… கவிதாசன்.

தலைப்பு !
“ கண்கண்ட தெய்வங்கள் பெற்றோரே”

தரணியாழ உயிரீந்த தெய்வங்கள் பெற்றோரே
தந்தைதாய் தந்தனரே சொந்தங்கள் மற்றோரே //

வரம்தருவார் சந்ததிக்கு வாழையடி வாழையாய்
வந்தருள் புரிந்திடுவார் வாழ்வுதந்து
வேலையாய் //

சிரம்தாழ்த்தி பணிந்திட சிகரமும் தொட்டிடலாம்
சிந்தையுடன் செயல்பட சிவலோகம் கண்டிடலாம்//

கரம்கூப்பி வணங்கிடும் கண்கண்ட தெய்வங்கள்
காசினி கண்டிட கரைந்திடும் பாவங்கள்//

நடமாடும் கடவுளாம் நம்முன்னோர் இல்லத்தில்
நாமுயர பாடுபட்டு மனம்சுவைப்பர் உள்ளத்தில் //

தடமாறி நடக்கையில் திருத்திட கண்டிப்பர்
தன்சொல் மீறிட தவறாமல் தண்டிப்பார்//

இடம் பொருள் பாராமல் இன்னலை போக்கிடுவார்
இரவுபகல் ஓயாமல் இருளினை களைத்திடுவார் //

திடமான வாழ்விற்கு திரியாகி ஒளிதருவார்
திரவியம் தேடிட தினம்தோறும்
வழிதருவார்//

இல்லக் கோயிலின் இருதெய்வம் பெற்றோரே
இதயத்தில் தரிசித்து பூசிக்க கற்பீரே//

செல்லக் குழந்தைகளாய் சிரித்து ரசிக்கையிலே
சொல்லால் மகிழ்வித்து சுகப்பட ருசிப்போமே //

இல்லை… சொத்துசுகம் என்றபோதும் மதிப்போமே
இப்பிறப்பைச் சொத்தாக்கி இகத்தினில் விதைப்போமே //

நல்லதோர் வாழ்விற்கு நம்பெற்றோரைக் குருவாக்கு
நாள்தோறும் ஒளிர்ந்து நலம்பெறும் தெய்வவாக்கு //

அபிராமி ( கவிதன் )

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading