10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ரஜனி அன்ரன்
“ வலிசுமந்த நாள் “…கவி…ரஜனி அன்ரன் (B.A) 18.05.2023
பெருவலி சுமந்து பேரிடர் நடந்து
மாறாத வடுவாகி மனதில் ரணமாகி
மேகக் கூட்டம் கரும்புகையாகி
மேதினியே உறைந்து நின்ற
மே பதினெட்டாம் நாள்
ஆண்டுகள் பதினான்கு ஆனபோதும்
ஆறவில்லை இன்னும் காயங்கள் !
முள்ளி வாய்க்காலில் மூச்சடங்கியவர்க்கு
முத்தான சொந்தங்களை தொலைத்தவர்க்கு
உறுப்புக்களை உடமைகளை இழந்தவர்க்கு
உறுதுணையாக வேண்டும் நீதி
உரிமைகளுக்கு வேண்டும் தீர்வு
தொடர்கிறது நீதிக்கான போராட்டமும்
கிட்டவில்லை இன்னும் தீர்வுகளும் !
சிறைக் கைதிகளை மீட்டிட
மனக் காயங்களை ஆற்றிட
காணாமற் போனோரை மீட்டிட
ஒட்டுமொத்த உறவுகளும் ஒன்றுகூடி
ஒற்றுமையோடு குரல் கொடுத்து
நீதிக்காய் போராடி வீதியில் நிற்போர்க்கு
மடிந்த உறவுகளுக்கு வலிசுமந்த நாளில்
விடிவொன்று கிடைத்திட வழிசெய்வோம் !

Author: Nada Mohan
26
Jul
ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால்...
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...