கெங்கா ஸ்ரான்லி

பசுமை போற்றுவோம்
———
எங்கெங்கு பார்த்தாலும்
இயற்கையின் அழகு
எழில்மிகு தோற்றத்தில்
எண்ணற்ற் பசுமைகள்
ஒரு லட்சம் மரம் நட்டு
விருது பெற்றாள் ஒரு தாயார்
ஒரு மரம் நட்டு நீரூற்றி

ஒவ்வொருத்தரும் வளர்த்தால்
உலகமே ஏற்றமிகு பசுமையில் மிஞ்சுமே
இப்போ பார்க்குமிடமெல்லாம் பச்சயம்
பச்சை பசேல் எனவயல்கள்
மக்களின் மனதில் களிப்பு
மரங்கள் இலைகள் துளிர்ப்பு
பூக்கும் பருவம் தளிர்ப்பு

குளிரும் இன்னும் இருக்கு
இயற்கையை பாதுகாக்க வேண்டும்
இயற்கையை அழித்தல் வேண்டாமே
மழையின்றி வரண்ட பாலைவனமாகும்
இயற்கையை போற்றி பாதுகாப்போம்
பசுமை வளர்ப்போம்
நாமும் பசுமையாக வாழ்வோம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading