க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 114
கஞ்சி

வலி சுமந்த கஞ்சி
மக்கள் பசி போக்கிய கஞ்சி
ஈரெழு வருடமாக
நினைவேந்திய கஞ்சி
ஒன்று கூட்டிய கஞ்சி

போர் கால பஞ்சத்தில்
உயிர் காத்த உணவு
போற்றி பகிர்ந்து
நினை வேந்தல் செய்து

அந்த ஆத்துமாக்களை
கௌரவிப்போம்
வீதிகள் தோறும்
பொங்கி
சிரட்டயில் குடித்து

உள்ளமதில் நினைவு
கூறுவோம்!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading