பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பால தேவ கஜன்

உயிராக நேசித்த தாய் மண்
தகுதியிழந்து தராதரமிழந்து
தறுதலைகள் கட்டுக்குள்
கதிகலங்கி நிற்கும் நிலை கண்டு
நெஞ்சத்தில் தீ! மூண்டதடா.

ஆவாவும் மாவாவும் ஆட்டம்
அதை அடக்க
ஒருவருக்குமில்லை நாட்டம்.
அரசியல் வாதிகளுக்கோ
பதவிகள் மேல் நாட்டம்.
மக்களோ பெரு வாட்டம்.
தேர்தலுக்காய் ஒரு கூட்டம்.
தேவை கேட்டால்
தெறிக்க ஓட்டம்.
எங்கள் தேசத்து நிலை காண
தேகத்தில் தீ! மூண்டதடா.

காவலுமில்லை
கட்டுப்பாடுமில்லை
ஒற்றுமையாய் பயணிக்க
ஒருவருக்கும் மனமுமில்லை
இதில் எங்கே நாம் உரிமை! பெற
எத்தனை எத்தனை தியாகங்கள்!
அத்தனையும் பயனின்றி
போனதை எண்ண எண்ண
நெஞ்சத்தில் தீ! மூண்டதடா.

தாறு மாறாய் கடனை வாங்கி
கூறு கூறாய் நாட்டை விற்று
பேறு இன்றி ஆக்கிவிட்டான்
கூறுகெட்ட சிங்களவன்.
தேறிவர தென்புமில்லை
தேற்றிக்கொள்ள தேர்ச்சியுமில்லை
வீழ்ச்சி நோக்கிய திசையில்
விரையுதெங்கள் நாடு
விடுதலை என்ற திண்ணம்
மூண்ட தீயில் அழிந்த காடாய்
வண்ணம் இழந்தே கிடக்கு.

Nada Mohan
Author: Nada Mohan