பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-13

01-06-2023

(5ம் ஆண்டு நினைவஞ்சலி) அப்பா

ஆண்டு ஐந்து ஆனாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள்.
மீண்டும் மீண்டும் வந்து எம்மை வாட்டிச் செல்கின்றதே
பாசம் பொழிந்து நேசமாய் எம்மை வளர்த்தெடுத்து
பாரினில் நேர்மையாய் வாழ
வழி காட்டிச் சென்றீர்கள்.

மொத்தமாய் யார் வந்து தேற்றினாலும்
முத்தான தாங்கள் கிடைப்பீரோ
நித்தமும் தவிக்கிறோம் உங்கள்
நினைவுகளால் அப்பா.
வேகாத வெய்யில் சுடுமென கைகளால் தடுத்தெமக்கு பிடிப்பீர்கள்.
வேக வைத்து விட்டு வேதனையில் தவிக்கிறோம்.

தருணமறிந்து தர்க்கம் விலக்கி அருளும் அறிவும் எழுந்த ஆளுமையும் அன்னைக்கு நிகரான அன்பின் பெருமை…!
மனதிற்குள் இன்னும் வலிக்குதப்பா.

அத்தனை உறவுகள் அருகிருந்தும் பித்தன் போல் காலன் வந்து கொண்டு சென்றது கண்ணுக்குள் இன்னும் நிற்குதப்பா.

சொல்லிமாளாது உங்கள் அரவணைப்பு.
சொக்கத் தங்கமாய் எமக்கு கிடைத்தவர் தான் நீங்கள். அலை அலையாய் ஆயிரம் ஆறுதல் சொல்ல யார் வரினும் ஆறாது எங்கள் மனங்களப்பா.

இறப்பு நியதி எனப் படைத்தவன் வகுத்தார்.
மீண்டுமொரு பிறப்புண்டேல் தங்கள் பிள்ளைகளாத் தவழ வேண்டும் நாங்களப்பா.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan