மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

அபிராமி கவிதாசன்

06.06.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் -225/
தலைப்பு !
“ஆறுமோ ஆவல் “

அன்னைப் பூமி
மடிதனிலே – என்னை
அள்ளி அணைத்த
தாய் மண்ணே !

தத்தித் தவழ்ந்து
நடைபழகி – விழுந்து
முத்தம் பதித்த
முதல் மண்ணே!

உன்னைத் தொட்டு
சுவைத்த பின்புதானே
சுவையை அறிந்தேன்-என்
சொந்த மண்ணே !

வெள்ளைச் சீருடையில்
வெண்புறா நானும்
விழுந்து எழுந்ததும் -உன்
மடி மண்ணே !

நட்பின் குழாமுடன்
நான் கூடிக்குழாவி
கொஞ்சி மகிழ்ந்த
நன்செய் மண்ணே !

தோட்டப் பயிரும்
தொண்மைத் தமிழும்
நாட்டமுடனே நானும்-உன்னால்
அறிந்த மண்ணே!

இதயம் ஓரமாய்
இன்னும்பல நினைவுகள்
இப்படியாக – என்னை
எட்டிப் பார்க்கிறதே
ஏக்கமுடன் என்தாய்மண்ணே !

உன்னை விட்டுப்பிரிந்தேன்
விடிவே இல்லை !
ஆவலும் கொண்டேன்
ஆறுமோ மனமும்-என்
சொந்த மண்ணே!

திறனாய்வு மிக சிறப்பு
நன்றி பாவை அண்ணா🙏🏻

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading