Selvi Nithianandan

மணி

கண்ணுக்கு அலங்காரம்
காவலாய் சிறுமணியாம்
பொருளுக்கு வெகுமதியாம்
பெயரோடு நவமணியாம்

பொன்னுக்கு அளவுக்கு
குண்டுமணி அலகாம்
பெண்ணுக்கு ஆடைக்கு
வண்ணமணி அழகாம்

ஆலயத்தில் அற்புதமாம்
காண்டாமணி ஒலியாம்
அரண்மனை வாசலிலும்
ஆராய்ச்சிமணி அசைவாம்

எண்ணற்ற மணிகள்
எழுத்தாய் வரைவாம்
ஏக்கத்தின் இருப்பில்
செம்மணி நினைவும்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading