Selvi Nithianandan

மணி

கண்ணுக்கு அலங்காரம்
காவலாய் சிறுமணியாம்
பொருளுக்கு வெகுமதியாம்
பெயரோடு நவமணியாம்

பொன்னுக்கு அளவுக்கு
குண்டுமணி அலகாம்
பெண்ணுக்கு ஆடைக்கு
வண்ணமணி அழகாம்

ஆலயத்தில் அற்புதமாம்
காண்டாமணி ஒலியாம்
அரண்மனை வாசலிலும்
ஆராய்ச்சிமணி அசைவாம்

எண்ணற்ற மணிகள்
எழுத்தாய் வரைவாம்
ஏக்கத்தின் இருப்பில்
செம்மணி நினைவும்.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading