Selvi Nithianandan

மணி

கண்ணுக்கு அலங்காரம்
காவலாய் சிறுமணியாம்
பொருளுக்கு வெகுமதியாம்
பெயரோடு நவமணியாம்

பொன்னுக்கு அளவுக்கு
குண்டுமணி அலகாம்
பெண்ணுக்கு ஆடைக்கு
வண்ணமணி அழகாம்

ஆலயத்தில் அற்புதமாம்
காண்டாமணி ஒலியாம்
அரண்மனை வாசலிலும்
ஆராய்ச்சிமணி அசைவாம்

எண்ணற்ற மணிகள்
எழுத்தாய் வரைவாம்
ஏக்கத்தின் இருப்பில்
செம்மணி நினைவும்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading