இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சக்தி சக்திதாசன்

நாளை என்றொரு ஊரை நோக்கி
இன்று நாம் போகும் பயணம்
நேற்றைய பாதையில் எடுத்த அடிகள்
நெருஞ்சியும், மலர்களும் பரவிய பாதை

சேர்த்திடும் அனுபவம் கொண்டு
ஆக்கிய புத்தகம் ; நிறைந்த
அத்தியாயங்கள் இயம்பிடும்
அறிவுரைகள் ஆயிரமாயிரம்

ஏற்றிய இலட்சிய தீபம் காணும்
காற்றினில் அலைந்திடும் கோலம்
காத்திடும் அணையாமல் அதனை
போற்றிடும் கொள்கை விளக்கங்கள்

கைகளின் தழும்புகள் செப்பிடும்
உழைப்பின் மகிமையை முழுமையாய்
கால்களின் வடுக்கள் கூறிடும்
பயணப்பாதையின் இடர்களை

நூற்றிடும் சேலையின் வர்ணம் போல
அடைந்திடும் வெற்றியின் வர்ணங்கள்
வானவில்லின் வர்ணஜாலம் போல
வந்து மறைந்திடும் நிகழ்வல்ல வாழ்க்கை

போற்றிடு மனிதனாய்ப் பிறந்ததை
காத்திடு மனிதநேயத்தின் பெருமையை
நாட்டிடு ஒன்றே குலம் எனும் வேதத்தை
நலமே விளைந்திடும் நானிலம் எங்கனும்,

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading