பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 227
27/06/2023 செவ்வாய்
“பசுமை”
———-
மழை முகில் கலைந்தது!
மா மேகம் வெளுத்தது!
தழை எங்கும் துளிர்த்தது!
தரணி பசுமை ஆனது!

இள வேனில் பிறந்தது!
இனிய இளமை ஆனது!
புல வெல்லாம் பூத்தது!
புதிய பசுமை விரிந்தது!

அரும் பவிழ்ந்து விரிந்தது!
அதன் மென்மை தெரிந்தது!
விருப்புத் தேனும் கிடைத்தது!
வியக்கும் பசுமை அமைந்தது!

அழகுப் பதுமை அசைந்தது!
அதிலும் பசுமை தெரிந்தது!
பழகும் விதமும் புரிந்தது!
பசுமை பக்குவ மீந்தது!

வயலும் பசுமை ஆனது!
வானம் வர்ணம் தந்தது!
கயலும் ஓசை இசைத்தது!
காதும் பசுமை யானது!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan