சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

தாயகத்தை பார்க்க தவிப்போடு போனால்
ஏன் வந்தோம் என்ற ஏக்கந்தான் மிஞ்சும்
பாசமுடன் பழகிய பந்த சொந்தம் எல்லாம்
பணத்தை எதிர் பார்க்கும்
ஆயிரம் தேவை அவர்களுக்கு
அதனால் எம்மை காண
பண மரம் காய்த்திருக்கும் நாட்டில்நாம்
புலம் பெயர்ந்து உள்ளதுவாய்
ஊரில் உள்ளோர் நினைப்பு
ஏதேனும் காணி வீடு எமக்கென்று
இருந்தால்
எழுதி தா என்று வற்புறுத்தல்
ஒருவருக்கு உதவினால்
உள்ள பிற சொந்தங்கள் கோபம்
தானாக பாயும் நதி குளம்
இல்லை எனினும்
தேன் பாடும் திருநகர்
மட்டுநகர்
பாடு பட்டு உழைத்து பயன் பெற்று
போதும் என்ற மனதோடு
கூடி வாழ்ந்தோம் ஒருகாலம்
நெல்வயலும் தோட்டமும்
நல்லபடி கயு மரங்களும்
பச்சை படுத்தி வளவு துரவால்
பயன்தந்தது ஒருகாலம்
நாகரீகம் முற்றி அடங்காத ஆசை
நெறி கெட்ட சமூகம்
கொள்ளை கொலை களவு
காமம் என்றெல்லால்
அல்லல் அதிகம்
பிஞ்சுகளை கசக்கும்
பெரிய வயதாளர்
கற்பிக்கும் ஆசிரியர்
கற்பழிப்பு அதிகம்
எமக்கென்ற நாடாய்
எம் தலைவன் கீழாய்
தலைக்குமேல் யமன்
தன்பாட்டில் நடமாட
ஒழுக்கமாய் இருந்தோம்
பச்சைத் தமிழன் இன்று
பாழ்பட்டு
இச்சை தமிழனாய் ஏன் ஆனான்.வேதனைதான்.
மாறுமா நிலை?

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading