26
Jun
இது வாழ்க்கையப்பா
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
29.06.23
கவி இலக்கம்-275
மரண வலி
மண்ணுலகில் வந்தவர்க்கெல்லாம்
கண் இமைக்கும் நேரம்
விநாடிக்கு விநாடி துரத்திடுமே
பணக்காரன் ஏழை எனப் பாராது
காத்திருந்து கொத்திடுமே
ஒவ்வொரு செயலுக்கும்
ஒவ்வொரு பெயர் உள்ளது போல்
இதற்குப் பெயர்தான் விதியோ
இவ் விதி எனும் சதியானது
எவ் வீதியிலும் வந்திடுமே
மண்ணிலும் நடக்கலாம்
விண்ணிலும் விபத்தாகலாம்
பிறக்கும் போது பிரசவ வலியானது
இறக்கும் போது துறக்க முடியாத
மன வலியானது இறைவனுக்குச்
சொத்தான மரணமே
மனிதனுக்குப் பெரிய
தலையிடி ஆனது.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.