பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

29.06.23
கவி இலக்கம்-275
மரண வலி

மண்ணுலகில் வந்தவர்க்கெல்லாம்
கண் இமைக்கும் நேரம்
விநாடிக்கு விநாடி துரத்திடுமே

பணக்காரன் ஏழை எனப் பாராது
காத்திருந்து கொத்திடுமே

ஒவ்வொரு செயலுக்கும்
ஒவ்வொரு பெயர் உள்ளது போல்
இதற்குப் பெயர்தான் விதியோ

இவ் விதி எனும் சதியானது
எவ் வீதியிலும் வந்திடுமே

மண்ணிலும் நடக்கலாம்
விண்ணிலும் விபத்தாகலாம்

பிறக்கும் போது பிரசவ வலியானது
இறக்கும் போது துறக்க முடியாத
மன வலியானது இறைவனுக்குச்
சொத்தான மரணமே
மனிதனுக்குப் பெரிய
தலையிடி ஆனது.

Nada Mohan
Author: Nada Mohan