நதுநசி

உதவியதால் உதைக்கும்
தேசத்தில் பிழைக்கிறோம்.
******************************
என்னிடம் அன்பு அது
எண்ணமும் கூடவே!
அணையுடைத்த ஆறு
பெருக்கெடுப்பது போல.

சிறு துரும்பு நான்
எறும்பு போல இருக்க;
கண்டு நின்று அன்று
வழிகாட்டிச் சென்றார்.

வென்று விட்டேன்.
மனதால் மகிழ்ந்து
நன்றே நடந்து நான்
சிரித்திட மகிழ்ந்தார்.

கை பழகிய செயல்
மனம் ஏற்று நடத்தும்
தொழில் இன்று நன்று
பிழைத்திடும் வழியில்.

பழைய நினைவு
வந்து மோதி என்னை
சீண்டிப் போகிறது.
சீறலும் வந்து போக.

முயன்று போராடி
முன்னே நகர்ந்திட
தடையிட்டு நிற்கிறார்.
சோம்பறிக்கு உதவி.

எப்படி நினைத்திட
இந்த தேசத்தைவரை.
ஊன்றி நடந்திட தடி
கொடுத்தவரை உதைத்தார்.

வாய்க்கு சுவையாக
வாழ்வுக்கு இதமாக
சூழல் கொடுத்து தான்
எதிர்காலத்தை பறிக்கிறார்.

நாமாகவே நாம்
முயன்று தேடினால்
நாளையும் நமக்காகவே
மலர்ந்து போகுமே!

இருப்பதை போல
தொடர்ந்து நடந்தால்
கிடைப்பதில் மாற்றம்
தானே வந்திடும் இங்கே!

நிமிர்ந்து நின்று
நிலைநாட்டிய வீரம்
விரும்பி நின்று
விதைத்த காதல்.

பழுத்த பழம் இங்கே
இனிக்கும் நன்றே!
வெம்பிப் பழுத்திடல்
சுவைக்க பிழைத்திடும்.

சேற்றில் விளையும்
தாமரையும் அல்லியும்
நெல்லும் கூடவே
மனதைக் கொள்ளையிடும்.

காட்டில் சேரும்
தேனும் கூடவே
நாகத்து நஞ்சும்
மருந்தாகிப் போகும்.

முற்றிய காய் பழுக்க
மின்னிடும் வைரமாகிட
வாழையும் குலை போட
காத்திருக்க வேண்டும்.

பொறுமை வழி நின்று
இலக்கு சுமந்து போரிட
நடந்திட வேண்டும் நாம்.
கடினங்கள் கடந்து தான்.

கரம் கொடுத்துவிட
கரம் வெட்டிவிட்டு
உணவூட்டும் தேசத்தில்
பிழைக்க உழைக்கிறோம்.
…….. அன்புடன் நதுநசி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading