பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 229

“திருநங்கை”

ஆணென்றும் பெண்ணென்றும் மனிதனை ஆண்டவன் படைத்தானையா!
இனம்பெருக்கி வாழ்கவென வழிசமைத்துக்கொடுத்தான் ஐயா!
நிரந்தரமானஇந்நிகழ்வில் இடையூறுவந்ததையா!
பால்மாற்ற வியாதியென யௌவனத்தில் வருகுதையா!

ஆண் அவன் ஆண்மைகுன்றி பெண்ணாவதும்
பெண் அவள் பெண்மையின்றி ஆண்மை அடைவதும்
அதிசயமாய் திருநங்கை என்றொரு பால் தோன்றுதையா
ஆணுமில்லா, பெண்ணுமில்லாரை அலி என்றார் அந்நாளில் ஜயா
விந்தையான மாற்றமுறும் திருநங்கையர் இதை யாருக்குவெளிப்படுத்துவாரையா?
பெற்றவரும் கண்டுகொள்ளார் உற்றவரும் உணரமாட்டார்
மூடிமறைத்துவைத்து இவர்படும் மனக்கிலேசம் சொல்லமுடியாதையா

எந்நாளில் விடிவுவரும்? சமூகம் என்று அரவணைக்கும்?
அந்நாள் வந்தாலன்றி திருநங்கையர் வாழ்வில் எங்ஙனம் ஒளி பிறக்கும்?
ஆண்பால் பெண்பாலுடன் பொதுப்பாலின் பிரிவில் திருநங்கையரை இணைத்தல் விவேகமான செயலாகுமா ஐயா?

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan