கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-228
விருப்புத் தலைப்பு !

“கரும்புலி “
தாயக நாட்டிற்கும்
தன்இன பிறப்பிற்கும்
தானமாய் உயிர்ஈந்த
தன்னலமற்ற உடன்பிறப்பே !

தீயகொடுமை தனை
தீயிட்டுக் கொழுத்திட
தீரா வேட்கை கொண்ட
தியாகச் செம்மலே !
காயம் கை காலன்று
கருகிய உடலாகக்
கருமருந்துக் குழிக்குள்ளே
கரைந்த உயிர்களே !

தூய மனத்தினில்
துளிர்விட்ட நாட்டுப்பற்றில்
துணிந்து போர்க்களம் ஏகிப்
பொருதித்
துடித்து மரணமே !

கானகத் தோட்டத்தில்
கரும்புலிக் கூட்டங்கள்
காணும் இடமெங்கும்
கன்னிமானாய் ஓடிடும் !

ஊனதை உண்டிட
ஒடியே ஒருகூட்டம்
ஊடுருவி வந்தங்கே
உயிர் குடித்துச் செல்லுமே !

வீணது உடலங்கு
விடுதலைப் புலியாகி
வாழ்வது நிலையாது
வாடிப் பொசுங்கியதே !

மானமுள்ள மறத்தமிழன்
மண்ணிற்காய் உயிரீந்து
மக்களுக்காய் உடலீந்து
மரணித்துப் போனானே !

கரும்புலி கால்சுவடு
காணாமல் போனாலும்
கனவோடு விதைத்தது
கருவாகி முளைக்குமே !

இரும்பு நம்பிக்கை
இதயத்தில் மலருதே
இனிக்குது கரும்பாக
இக்கணத்தினுள் தமிழாகி

உருண்டு உடலில்லை
உயிருண்டு உறுப்பில்லை
உணர்வுகள் துடிக்குதே
உயிர்தந்த நாட்டுக்காய்

இருந்தாலும் ஆயிரம்பொன்
இறந்தாலும் ஆயிரம்பெண்
இதயத்தில் கரும்புலிகள்
இறுதிவரை வாழ்ந்திடுமே !

அபிராமி கவிதாசன்
11.07.2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading