மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-228
விருப்புத் தலைப்பு !

“கரும்புலி “
தாயக நாட்டிற்கும்
தன்இன பிறப்பிற்கும்
தானமாய் உயிர்ஈந்த
தன்னலமற்ற உடன்பிறப்பே !

தீயகொடுமை தனை
தீயிட்டுக் கொழுத்திட
தீரா வேட்கை கொண்ட
தியாகச் செம்மலே !
காயம் கை காலன்று
கருகிய உடலாகக்
கருமருந்துக் குழிக்குள்ளே
கரைந்த உயிர்களே !

தூய மனத்தினில்
துளிர்விட்ட நாட்டுப்பற்றில்
துணிந்து போர்க்களம் ஏகிப்
பொருதித்
துடித்து மரணமே !

கானகத் தோட்டத்தில்
கரும்புலிக் கூட்டங்கள்
காணும் இடமெங்கும்
கன்னிமானாய் ஓடிடும் !

ஊனதை உண்டிட
ஒடியே ஒருகூட்டம்
ஊடுருவி வந்தங்கே
உயிர் குடித்துச் செல்லுமே !

வீணது உடலங்கு
விடுதலைப் புலியாகி
வாழ்வது நிலையாது
வாடிப் பொசுங்கியதே !

மானமுள்ள மறத்தமிழன்
மண்ணிற்காய் உயிரீந்து
மக்களுக்காய் உடலீந்து
மரணித்துப் போனானே !

கரும்புலி கால்சுவடு
காணாமல் போனாலும்
கனவோடு விதைத்தது
கருவாகி முளைக்குமே !

இரும்பு நம்பிக்கை
இதயத்தில் மலருதே
இனிக்குது கரும்பாக
இக்கணத்தினுள் தமிழாகி

உருண்டு உடலில்லை
உயிருண்டு உறுப்பில்லை
உணர்வுகள் துடிக்குதே
உயிர்தந்த நாட்டுக்காய்

இருந்தாலும் ஆயிரம்பொன்
இறந்தாலும் ஆயிரம்பெண்
இதயத்தில் கரும்புலிகள்
இறுதிவரை வாழ்ந்திடுமே !

அபிராமி கவிதாசன்
11.07.2023

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading