ரஜனி அன்ரன்

“ விடுமுறை வந்தாலே “ ……..கவி…..ரஜனி அன்ரன் (B.A) 20.07.2023

வாடையை விரட்டி வசந்தத்தைத் தந்த கோடை
கொடையாய் கிடைத்ததே எமக்கு
கோடை விடுமுறை வந்தாலே
கொண்டாட்டம் கும்மாளமென
கோவில் திருவிழாக்கள் களைகட்ட
குடும்ப விழாக்களும் கலகலக்க
பள்ளிக்கும் பணிக்கும் விடுப்பாக
குடும்பமாய் கூடிமகிழும் விடுமுறை காலமிது !

இயற்கை அழகை ரசித்து மகிழ
இயந்திர வாழ்விற்கு இடைவேளை கொடுக்க
இயற்கையோடு பொழுதைக் கழிக்க
உறவுகளோடு உறவாடி மகிழ
பயண அட்டையும் கைகொடுக்க
மகிழ்வாய் வந்ததே கோடை விடுமுறையும் !

வசந்த காலமதை சுகந்தமாக்கி
படகுப் பயணத்தை மேற்கொள்ள
சுற்றுலாத் தளத்தினைச் சுற்றிவர
சுமைகளை எல்லாம் இறக்கி வைக்க
வரமாய் கிடைத்தது கோடை விடுமுறை
கோடை விடுமுறை வந்தாலே கொள்ளை இன்பமே !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading