பதியமிடும் எழுத்தாணிகள்

இரா. விஜயகௌரி பதியமிடும் எழுத்தாணி பதித்தெழுந்த மொழிக்குழந்தை உலகளந்து தடமிடுவாள் உயர்வு கொண்டு மொழியிழைவாள் கூண்டுக்குள் சிறைப்பறவை -நிதம் கூவி எழும்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

ராணி சம்பந்தர்

ஆதி மனிதன் வழி காட்டிடவே
ஓதி ஓதி சாதிமத பேதமின்றி
ஓலைச்சுவடிகளில் எழுதியது
அழியாதிருக்க விழி காட்டியது

பாதிச் சுமை குறைய போதி மர
நிழலில் மண்ணில் குச்சியாலே
கீறி எழுதி எழுத்துக் கூட்டியது

இலண்டன் தமிழ் வானொலித்
தொலைக்காட்சியால் சிறுவரது
எழுத்துப் பயிற்சியின் முயற்சியே
மூலதனமாய்க் காட்டியது

பாதிச் சுமை குறைய ஒளியூட்டும்
சோதி விளக்காய்ப் பரவிடப்
பதியமிடும் எழுத்தாணிகள்
ஏணிப்படி ஏறி முன்னேறிடவே
கழிப்பூட்டியது .

Nada Mohan
Author: Nada Mohan