பதியமிடும் எழுத்தாணிகள்

இரா. விஜயகௌரி

பதியமிடும் எழுத்தாணி
பதித்தெழுந்த மொழிக்குழந்தை
உலகளந்து தடமிடுவாள்
உயர்வு கொண்டு மொழியிழைவாள்

கூண்டுக்குள் சிறைப்பறவை -நிதம்
கூவி எழும் ஒலியுமல்ல இவள்
உணர்ந்தெழுந்து மொழியழைந்து
குலவி நின்று செவி தொடுவாள்

உணர்வின் இழை உலகளக்கும்
பாமுகத்தாய் தொட்டணைத்து
பரிவுடனே அமிழ்திழைய -இவள்
பேதமின்றி உயர்ந்தெழுவாள்

உச்சி முகர்ந்தெழுந்து ஊரறிய
முரசறைய தாயவள் தான் தவித்தலைவாள்
இளையவர்தாம் உணர்வாரா -இவள்
பாச இழை பற்றின் வலி

ஈர் பத்தின் ஓர் இழையை தொடுகின்றபேருவகை
பதியமிடுத் எழுத்தாணி பாரினிலே
உயர்ந்தெழுந்து உவகை கொள்ள
மடியேந்தி பெரு வாழ்த்து பாமுகமாய்…..

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading