மாற்றத்தின் ஒளியாய்

இரா.விஜயகௌரி மாற்றத்தின் ஒளியாய் மனங்களுள் தெளிவாய் ஏற்றத்தின் படியாய் துலங்கிடும் எழிலே காலத்தின் மாற்றம் கனிந்திடும் பொழுதில் தொடுத்திடும்...

Continue reading

இரா.விஜயகௌரி

வாழ்வு ஒரு வட்டம்

புலரும் பொழுதுகளின்
எழில் வர்ணம் தீட்டி
இனிய தருணங்களை
எழுதி வரும் பெருவாழ்வு

மேடும் பள்ளமும். இங்கு
தீதும் இனிதுமென
தினமும் மாறி வரும்
எதிர் கொண்டெழுதல். பலம்

இன்று. வாழ்த்துதலும். -நாளை
தூற்றுதலும் அவரவர் எண்ணத்தில்
மனம் ஏற்று நலிந்தொழிந்தால்
நாமே துவண்டழுவோம்

பேதை. மனிதர்கள். நாம்
வாதை வலி சுமந்து நாம்
தோள்கள. வலுவிழந்து
பெரு வாழ்வை. வழியை அழிப்பதுவோ

நம்மை நாமுணரின்- நம்
பலத்தை வலுவெழுதின்
நேர்ந்த நிமிர் நடையும் -அந்த
செருக்கின். பெருமை. சொல்வோம்

Nada Mohan
Author: Nada Mohan