15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சந்தம் சிந்தும் சந்திப்பு231-
பாலை நிலமாக பழைய காலம்-பின்
பசுமை நிலமானதாம் உழைப்பால் யாழ்ப்பாணம்..
ஆழக்கிணறு வெட்டி பின்
ஆழ்துளை குழாய் கிணறு வைத்து
வாழ தொடர்ந்து உழைத்து
வளம் கண்ட யாழ்ப்பாணம்.
படிப்பு,உழைப்பு,பண்பாடு
கூட்டுறவு
எடுத்த காரியம் முடிப்பு
எங்கும் முயற்சி துடிப்பு.
எங்கே போனது எல்லாம்
எதையும் காணோமே
சோம்பல்,சொகுசு தேடல்
காசை கரைப்பதில் வீறு
வாள் வெட்டு,கொள்ளை
வழிப்பறி,கல்வியும் பாழ்
ஆளை ஆள் நம்பாத அடிதடி
காணி பிடிப்பு,கற்பழிப்பு
வன்முறை,வீதி தொறும் தினம்
விபத்து,
சாபமோ,கேடோ,
உள்ள ஆழ் ஊற்று எல்லாம்
காவி படிவு
மழை இல்லா வரட்சி
மீண்டும் பாலை நிலமாகுதோ
யாழ்ப்பாணம்
போர் போர் என்றோம்
இன்றோ ஆள் இல்லா வீடுகள்
அடியார் இல்லா கோயில்கள்
பண்பில்லாத நடத்தைகள்
பாழாகுது யாழ்ப்பாணம்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...