20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சக்தி சக்திதாசன்
என்னைப் பற்றிய
எனது குறிப்புகளை
எங்கோ தொலைத்து விட்டேன்
எழுத்து எனும் வெளிச்சத்திடு
என்னைத் தேடிக் கொண்டே !
முன்னை ஒரு பிறப்பில்
என்னைக் கண்டதாக
சொன்ன ஒருவரின்
சொற்களுக்குள் நானெங்கோ
சிக்கியிருக்கிறேனோ ?
விண்ணை நோக்கினேன்
விசாலமாய் ஒரு உருவம்
விளக்கியது வாழ்க்கைக் கோலத்தை
வித்தியாசமானவனல்ல நீ !
விசித்திரமான ஒரு அறிவுக்குருடனே !
நின்னைப் புரிந்திடாமல்
நிந்தன் பாத்திரத்தைக் அறிந்திடாமல்
வேடம் கலைந்து விட்டால்
ஏதுமற்ற ஓர் ஆன்மா எனப் புரியாத
ஞானச்சூனியத்துள் புதைந்தவனே நீ !
சொன்ன விளக்கங்களால்
என்னுள் புரளுகின்ற
எண்ண அலைகளினுள்
மிதக்கும் படகாக தெரிவதொன்றே
மீதமிங்கு ஆன்மாவென்பதுவே !
எழுத்துகள் முடிவதில்லை
எண்ணங்கள் ஓய்வதில்லை
எந்தன் தேடல்கள் மாய்வதில்லை
உணர்ந்ததை எழுத்தாக்கித் தாளில்
உண்மையை வடித்திடுவேன்
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...