அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

நமசிவாயா எதற்கு..!?

கோயில்களெல்லாம்
அலங்கார உற்சவம்
கோப்பைகளேந்திய மனிதர்கள்
ஊர்வலம்
காத்திரமில்லையென்று- சிலர்
கையேந்தும் நிலையுமேனோ?

பாவப்பட்ட ஜென்மங்களை -இப்
பாரினில் சுமந்துவிட்டு- வீதி
ஓரம் விட்டெறிந்து
விளையாட்டாய் போனதாலே

தந்தையும் தாயும் தெரியாமல்
அனாதைகளென்ற பெயர்
பெற்றவரைப் பெற்றவர்கள்- இன்று
பின்புறம் தள்ளியதால்- பெற்றவர்
இன்று ஆச்சிரமத்தில் அகதிகள்

பெற்ற கடன் தீர்ப்பதற்கு பிள்ளைகள்
சிலர் இங்கில்லை
உற்ற கடன் தீர்ப்பதற்கு- சில
உறவுகளிற்கு வழியில்லை

சொத்துச் சுகம் , பணமிருந்தென்ன
சொந்தமெல்லாம் வேறுகூறாகி
நற்றுனையில்லை யென்றால்
நமசிவாய எதற்கு..!?

– கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி. இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading