மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

நமசிவாயா எதற்கு..!?

கோயில்களெல்லாம்
அலங்கார உற்சவம்
கோப்பைகளேந்திய மனிதர்கள்
ஊர்வலம்
காத்திரமில்லையென்று- சிலர்
கையேந்தும் நிலையுமேனோ?

பாவப்பட்ட ஜென்மங்களை -இப்
பாரினில் சுமந்துவிட்டு- வீதி
ஓரம் விட்டெறிந்து
விளையாட்டாய் போனதாலே

தந்தையும் தாயும் தெரியாமல்
அனாதைகளென்ற பெயர்
பெற்றவரைப் பெற்றவர்கள்- இன்று
பின்புறம் தள்ளியதால்- பெற்றவர்
இன்று ஆச்சிரமத்தில் அகதிகள்

பெற்ற கடன் தீர்ப்பதற்கு பிள்ளைகள்
சிலர் இங்கில்லை
உற்ற கடன் தீர்ப்பதற்கு- சில
உறவுகளிற்கு வழியில்லை

சொத்துச் சுகம் , பணமிருந்தென்ன
சொந்தமெல்லாம் வேறுகூறாகி
நற்றுனையில்லை யென்றால்
நமசிவாய எதற்கு..!?

– கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி. இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading