சிவரூபன் சர்வேஸ்வரி

நமசிவாயா எதற்கு..!?

கோயில்களெல்லாம்
அலங்கார உற்சவம்
கோப்பைகளேந்திய மனிதர்கள்
ஊர்வலம்
காத்திரமில்லையென்று- சிலர்
கையேந்தும் நிலையுமேனோ?

பாவப்பட்ட ஜென்மங்களை -இப்
பாரினில் சுமந்துவிட்டு- வீதி
ஓரம் விட்டெறிந்து
விளையாட்டாய் போனதாலே

தந்தையும் தாயும் தெரியாமல்
அனாதைகளென்ற பெயர்
பெற்றவரைப் பெற்றவர்கள்- இன்று
பின்புறம் தள்ளியதால்- பெற்றவர்
இன்று ஆச்சிரமத்தில் அகதிகள்

பெற்ற கடன் தீர்ப்பதற்கு பிள்ளைகள்
சிலர் இங்கில்லை
உற்ற கடன் தீர்ப்பதற்கு- சில
உறவுகளிற்கு வழியில்லை

சொத்துச் சுகம் , பணமிருந்தென்ன
சொந்தமெல்லாம் வேறுகூறாகி
நற்றுனையில்லை யென்றால்
நமசிவாய எதற்கு..!?

– கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி. இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading