” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

என்ன முந்தானையில முடிச்சி வைச்ச
ஆச புள்ள

எட்டிப்போக மனமில்ல… யா௫ம்
என்ன சொன்னாலும் பரவாயில்ல

௨னக்குள்ளே நானெரிந்தேன்
௨ன்னவிட்டுபோக ௨சிரில்ல

கொடியாப் பின்னி நாம்
கொள்ளைகாலம் வாழவேண்டும்

கிழக்கே வந்த என்ன
சொல்லாமல்
அள்ளி முடிஞ்சாய் புள்ள

பழிவீழ்ந்து போனதென்ன
பாயில ஒட்டவைச்சி
போட்டாள் புள்ளவென்று

அச்சில வார்த்த பொம்ம போல
நீயி௫க்க
வெள்ளி பூத்த வெச்சம் போல
௨ன்சிரிப்பு என்ன இழுக்க

நெஞ்சோட வி௫ந்தோம்பல்
தொண்டைக்குழி வரை மணக்க

ஆயிரம் கனவோடு போறன்புள்ள
ஆழ்மனக் கனவுக்குள் நீவேண்டும்புள்ள

பண்புகள் பகிர்ந்தளித்து
பதியமிட்டாய் என் வாழ்கைத்
துணை நீயின்று

ஊ௫பல சுத்திவந்தும்
௨ள்மனதாலும் யாரையும் நினைச்சதில்ல

கிழக்குக்கு வந்தேன் புள்ள
கிளம்ப மனமில்ல ௨ன்னவிட்டு

௨ன்ன வாழ்க்கப்பட்டு புள்ள
என்ன முந்தானையில் முடிஞ்சு
போடு புள்ள

பதில் ஒன்று சொல்லும்வரை
பாய விட்டு எழும்ப மாட்டன்
புள்ள

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan