20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சிவரூபன் சர்வேஸ்வரி
வலைப் பூ-
என் ஆசை மச்சான்-நீ
வலைகொண்டு வருவாயென்று-யான்
சிலையாக நிற்கின்றேன்
கலையாக நீ வந்தாய்- நானும்
காதல் வலை வீசிநின்றேன்
வேலைக்குப் போகையிலே – உனக்கு
வீண் பேச்சுத் தேவையில்லை
வலை போட்டு வந்தால்த்தான்-
சுளையாகப் பணம் வருமே
கடலலை அடிக்கிறது- அங்கே
காற்றும் பலமாய் வீசுகின்றது
நடுக்கடலுக்குப் போகவேண்டும்
நான் வாரேன் நாயகியே
என் மனமும் அலை போல
குமுறுவது புரியலையோ
வலை வீசி மீனைப்பிடி- உன்
வலைப்பூவுக்குள் என்னைப்பிடி
பாசவலை போட்டதாலே-என்
நேசவலை நீ யானாய்
மோசவலை போடாமல்- என்
மோகினியே விலகிநில்.
கலையாத என்னகத்தில் நிலையாக நிற்பாய் மச்சான்
பாலைவனமாய் நிற்கின்றேன். சோலை
வனமாய் வருவாய் மச்சாள்
வாலைக்குமரியடி கண்னே -என்னை
வளைப்பூக்குள் மடக்கிய சிறுக்கியடி
கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி..✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...