பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி.

வீணர்கள் நிலை

குருவிக்கூட்டுக்கு கல்லெறிந்து பார்
குருவிகள் பறந்து விடும் -ஆனால்
நீ குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்து பார்
குளவிகள் கொட்ட வரும்

குணமறிந்து செயலற்ப்பட்டால் -ஒரு
குற்றமும் தெரியாது.
குறுக்கு வழியில் சாதிப்பேனென்று
கொப்பரம் தட்டி நின்றால்

தலை குனிந்து போகும் நிலையும்
வெகு தூரமில்லை.
நல்லவன் போன்று நப்பாசை போட்டு
வேடம் கட்டும் சிலர்- இன்று
நாடெல்லாம் பரவி நின்று
நர்த்தன மாடுகின்றனர்.

உண்மையாய் வாழ்கின்றோம்- என்று
ஓர் முழக்கம்
ஊர் வம்பை வேண்டி- அங்கு
ஒர் பதட்டம்
நல்லவரையும் பந்தாடும் கூட்டம்
நமனுக்குமஞ்சோமென ஓட்டம்

கல்நெஞ்சுக்காரர் செய்யுமாட்டம்
கருணையென்பது இல்லாத தேரோட்டம்
பூவையவள் பாரினிலே
பூகம்பமாய் நின்றாள்
பூம்புகாரா கண்ணகி போன்று
வீம்புகள் செய்யும் வீணர்
கூட்டத்தை
வீர மகளாய்த் தானெழுந்து
நீதியையுரைத்தாலும்-
வீணர்கள் நிலை……..?????

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி.

Nada Mohan
Author: Nada Mohan