மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

குழல் ஓசை

ஏழுஸ்வரங்களிலெத்தனை இன்பம்
இனிய கீதங்களைக் கேட்கும்போது எத்தனை மாற்றம்
புதிய கீதை வந்தது போல் புல்லாங்குழலோசை
புவி விளங்க வந்ததுவே காக்கும் அவன் கரத்தில்

கார்குழலில் வண்டார்ப்ப
கண்ணன் கரத்தில் புல்லாங்குழலாப்பர்
ஆயர்பாடியில் தாலேலோ
ஆனந்தக் குழலோசை கேட்டிடுமே

பிருந்தாவனம் போல் நம்மனமும்
பிரியாமல் குழலோசையில் மயங்கிடுமே
கவலை கொண்டு தானிருந்தாலும்
கானம் கேட்டதும் கனிந்திடுமே

குழலிசை ,யாழிசை, நாதஸ்வர இசை
குழலிலசை நாதத்தை தட்டும் மோசை
இயலிசை நர்த்தனமாடிடுமே
இதய ராகம் மிதந்திடுமே

கல்தோன்றி மண்தோன்றி மனிதன் தோன்றும் போதே
கானங்களின் ஓசைகளும் கலந்து நின்றது
கல்லும் கனியும் தேவ கானம் கேட்டால்
காலத்தில் கீதமாய் பரவியது குழலோசையுமே.

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading