பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பத்மலோஜினி திருசெந்தூர்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 236

தலைப்பு – குழலோசை

சுருதியும் லயமும் ரம்மியமான குழலோசையோடு
ஸ்வரமும் சாகித்தியமும் தென்றலாய் இசைந்தாட
ஐதியும் நவரசமும் நாட்டியமாய் நடணமாட
பார்ப்போர் பரவசமாய் பார்த்து மகிழந்தனர்.

எத்தனை துவாரங்கள் குழழினிலே இருந்தும்
அத்தனையும் மூச்சுக் காற்றினால் இசையாகி
இத்தனைக்கும் விரல்கள் மூடிமூடி தொடுக்க
பித்தனாய் மாற்றுது எம்மை குழலோசை.

கண்ணன் குழலோசை காதினிலே பாய்ய
சரஸ்வதியின் வீணை வசீகரமாய் இசைக்க
நடராஜனின் உடுக்கை உவகையாய் யொளிக்க
கௌரியின்(என்) வயலீனும் ஈடுகொடுத்து நிற்குது.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
30/09/2023

Nada Mohan
Author: Nada Mohan