அவ்வை

மீண்டெழு………
================
மனதினில் நிகழ்ந்திடும் வெறுப்புகள் விலகிட
மனத்திடம் கருதியே நெருப்பென மீண்டெழு

உனக்குளே உறைகிற நினைவுகள் சுகந்தர
உறவுகள் உறுதியில் நெருப்பென மீண்டெழு

கனவுகள் கலைந்திடா மலர்கிற வழிகளில்
கவிதனில் மிளிர்ந்திட நெருப்பென மீண்டெழு

சினந்திடும் மனிதரைச் சிதைத்திடும் வகையினில்
சிறுத்தையாய் பகையுடன் நெருப்பென மீண்டெழு .

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading