10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
24.10.23
கவி இலக்கம்-120
ஆறு மனமே ஆறு
பல நூறு ஆயிரம் துன்பமது
பொல பொலவென வழியும்
கண்ணீரே பதில் கூறு
காலை முதல் மாலை வரை
குடிக்கப் பாலோ உண்ண
உணவோ அன்றி சேலைத்
தலைப்பைச் சுவைத்தபடி
தூங்கும் மழலை கூறுது
காணாமல் போனோர்
கண்டு பிடியாது குழி
புதைந்த சேறு
தீராத பேராசை மாறாத போதை
சேராத மதுக்கிண்ணம்
பாராத திண்டாட்டம்
முக்கி முக்கி மூட்டை தூக்கினும்
நிம்மதியாய் உண்பது சோறு
மாறாத மந்திரி தேறாத அரசியல்
தீர்வு காணாத கதிரையில்
குதிரைச் சவாரி சாறு நாறுது
பாரினில் வெடிக்குது
போரினில் துடிக்குது
நாறு நாறாய்க் கிழியுது
பூகம்பம்
தேனூறச் சேர்த்தவை
தாறுமாறாய் வெடித்துச்
சிதறுது பாரு பாரு
கூறு இனமே கூறு
ஏனிந்த இரத்த ஆறு
ஆறு மனமே ஆறு
ஆறு மனமே ஆறு

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...