தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

24.10.23
கவி இலக்கம்-120
ஆறு மனமே ஆறு

பல நூறு ஆயிரம் துன்பமது
பொல பொலவென வழியும்
கண்ணீரே பதில் கூறு

காலை முதல் மாலை வரை
குடிக்கப் பாலோ உண்ண
உணவோ அன்றி சேலைத்
தலைப்பைச் சுவைத்தபடி
தூங்கும் மழலை கூறுது

காணாமல் போனோர்
கண்டு பிடியாது குழி
புதைந்த சேறு

தீராத பேராசை மாறாத போதை
சேராத மதுக்கிண்ணம்
பாராத திண்டாட்டம்

முக்கி முக்கி மூட்டை தூக்கினும்
நிம்மதியாய் உண்பது சோறு

மாறாத மந்திரி தேறாத அரசியல்
தீர்வு காணாத கதிரையில்
குதிரைச் சவாரி சாறு நாறுது

பாரினில் வெடிக்குது
போரினில் துடிக்குது
நாறு நாறாய்க் கிழியுது
பூகம்பம்

தேனூறச் சேர்த்தவை
தாறுமாறாய் வெடித்துச்
சிதறுது பாரு பாரு
கூறு இனமே கூறு
ஏனிந்த இரத்த ஆறு
ஆறு மனமே ஆறு
ஆறு மனமே ஆறு

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading