சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 239 கவியரசர் கண்ணதாசன்
கலைத்தாயின் பெருமைந்தன்
சிலையாக்கும் சிற்பியைப்போல்
சிறப்பான கவிவடித்தார்

முத்தான எழுத்துகள்
முத்தமிழின் வனப்பாக
முத்தையா வடித்ததினால்
முத்தெனவே மிளிர்கின்றார்

கவிதைகள் ஓராயிரம்
கட்டுரைகள் ஓராயிரம்
காவியங்கள் பலநூறு
கவியரசர் படைத்திட்டார்

அரசியலில் வனவாசம்
ஆன்மீகத்தில் மனவாசம்
அர்த்தமுள்ள இந்துமதம்
அத்தனையும் முத்துக்கள்

கவியரசர் நினைவுவாரம்
கவிமாலை நான்கிதுவே
கவித்துவத்து அஞ்சலிகள்
கண்மூடித் துதிக்கின்றேன்

அஞ்சலிகளுடன்
சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading