சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1889…!

பள்ளிக்காலம்

இன்னும் பசுமையாய் என்னுள்
இனிக்கும் காலம்
இனியும் வேண்டும் என்றே மனம்
தவிக்கும் கோலம்..!

கல்வியில் மேன்மை தங்கியதே
அழகிய பருவம்
பல்விதமாய் நட்புக்கள் பூத்ததே
நினைவில் பூக்கும்…!

ஆசிரியர் சொல்லே மந்திரமாய்
ஏற்றது மனது
ஆசறக் கற்றோம் ஒழுக்கமும்
வந்ததே பண்பாய்…!

புள்ளிகள் பெற்றிடவே போட்டோம்
போட்டா போட்டி
பள்ளியில் பெறாதது எதுவுண்டோ
பெற்றிடவே என்ன வழி…!

வகுப்பேற்றம் தரு மகிழ்வு வெள்ளை
உடையில் சிறகுவிரிப்பு
உயர்தர கல்வியில் கலவன் வகுப்பு
பெரும் கலகலப்பு…!

நன்றியோடு நோக்கும் நம் பள்ளி
வாழ்வு
குன்றாது தழைக்கட்டும் கொக்குவில்
இந்துப் பள்ளி நிமிர்வு…!
சிவதர்சனி இராகவன்
25/10/2023

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading