இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ரஜனி அன்ரன்

“பள்ளிக்காலம்” …. கவி…ரஜனி அன்ரன் (B.A) 26.10.2023

பள்ளிக்காலம் பசுமைக் காலம்
பசுமை நிறைந்த உலாக்காலம்
பட்டாம் பூச்சியெனப் பறந்து
வட்டமிட்ட வனப்புக்காலம்
கற்பனையில் மிதந்த கனாக்காலம்
பெற்றவர் கனவை நனவாக்கிய காலம்
என் வாழ்வின் வசந்தகாலம் !

திறமைக்கு களம் தந்த கூடம்
திறவுகோலான மாடம்
கவலையே இல்லாத காலம்
சிலநொடிகள் மனக்கசப்பு
சின்னச் சின்ன சண்டைகள்
அடுத்தநொடி இணைந்தபடி
போட்டிகளில் கலந்தபடி
போட்டி போட்டுப் படித்திடுவோம் !

பள்ளிக்காலம் படிப்பு ஒருபக்கம்
விளையாட்டுப் போட்டிகள் மறுபக்கமென
மறக்க முடியாத நினைவுகள்
மனதை வருடும் நிகழ்வுகளென
பன்னிரெண்டு ஆண்டுகள் எனைச் சுமந்தபள்ளி
பணியோடு பாடம் கற்றுத்தந்த ஆசான்கள்
வாழ்வின் பொக்கிஷமான வசந்தகாலமே !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading