” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

மாவீரரே
தாய் மண்காக்க தியாகம் செய்த
பாய்யும் இன்றி பட்டிணி கிடந்து
காயந்த உணவும் கண்ணுக்கு எட்டாமல்
மாய்ந்த எங்கள் மாவீர்ரே எழுவீர்/

தாய் மனமும் தடுமாற தயாரானீர்
நோய் கண்ட நேரமும் நெருப்பானீர்
சேய்யைத் தேடிச் சித்தம் கலங்கி
ஓய்ந்த தாய்க்காய் எழுவீர் மாவிர்ரே/

எத்னை எங்கள் இனத்தவரை இழந்தோம்
அத்தனையும் அமிர்தம் அன்றோ எமக்கு
முத்தான எம்மினம் முடங்கியது ஏனோ
சத்தாக மீண்டும் சாதனை படைப்போம்/

அவலம் காக்க அரும்புங்கள் துளிராய்
தவமாய் கிடைத்த தங்கங்கள் நீங்கள்
அங்கம் இழந்து அல்லல் படுகின்ற
சொந்தங்கள் காக்க சத்தமின்றி வாரும்/

உறவுகள் பிரிந்தே உவாதைப் படுகின்ற
மறவரைக் காக்க மாவீரரே எழுக
எம்மினம் காக்க இழந்தோம் இன்னுயிகள்
எம்மவர் யாவர்க்கும் ஏற்றுவோம் தீபம்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan